நானும் தமிழன் தான்

முத்துகுமாரும், செங்கொடியும்
ஈழத்தமிழருக்காக உயிர்நீத்து
யேசுபிரானாவா போனார்..
பத்திரிக்கைகளுக்கும் சீமானுக்கும்
பழநெடுமாரனுக்கும்
தீனி கொடுத்தது தான் மிச்சம்;

முத்துக்குமார் மரித்த போது
முத்தமிழி அறிஞர் ஒரு
கையாலாகாத அறிக்கையும்
முதலைக் கண்ணீர் வடித்ததும் தான் மிச்சம்.
பிறகு எங்களுக்கு ஒரு வாரம் விடுமுறை
தந்து
திக்கு முக்காட வைத்து
வருடம் முழுதும் சனியன்று
வேலைநாள் ஆக்கி உயிர் எடுத்தார்..
அம்மா செல்வியை இந்த லிஸ்டில்
கூட சேர்க்க முடியாது.
ஒரு அறிக்கையில் கண்ணீர் வடிப்பார்,
மறு அறிக்கையில் போர் என்றால் மடிவது இயற்கை என்பார்..

பிரபாகரனே, இது எங்கள் பிரச்சனை,
இந்தியா தலையிட தேவையில்லை என்று அறிக்கை தந்தவர் தானே!!

கசாப்புக்கு
காஷ்மீர் வக்காலத்து வாங்கினால்
எப்படி இருக்குமோ
அப்படித்தான் நாம் பிரபாகரனுக்கு
பரிந்து பேசுவது இருக்கும்..

இப்படி எழுதுவதால் நான் ஈழனை வெறுப்பவன் அல்லன்
நானும் தமிழன் தான் நம் அரசியல்வாதியை போல..
உயிர் மரிப்பதல் எப்பலனும் எல்லை என்பதே என் கருத்து..
கம்யுனிசம் என்ன விலை என்று நல்லகண்ணுவே
கேட்கும் போது
உனக்கு மட்டும் என்ன வந்தது செங்கொடி..
செங்கோடியே கடைசியாக இருக்கட்டும்..
மரிப்பதனால் ஒரு பயனும் இல்லை என்று புரியட்டும்..

Never Smell Your Currency

ப்ளாக் எழுதியே பல நாட்கள் ஆகி விட்டது. இன்று காலை அமெரிக்கன் செமிக்கள் சொசைட்டி (American Chemical Society) -ல் ஒரு ஆராய்ச்சி கட்டுரை படித்த பொது கொஞ்சம் ஆச்சிரியமும், நிறைய பயமும் இருந்தது.. அதை தான் இங்கு எழுத போகிறேன்..
Bisphenol A என்னும் வேதி பொருளை பற்றி அந்த கட்டுரை நீண்டது.. Bisphenol A என்னும் வேதி நச்சுப்பொருள் நாம் உபயோக படுத்தும் பலபொருட்களில் இருக்கிறது. இதை plastic தயாரிப்பதற்கு மூலப்பொருளாக உபயோகிரார்கள். எண்பதுகளில் ஒரு மில்லியன் டன், 2009 -ல் சுமார் இரண்டரை மில்லியன் டன் பயன் பட்டிருப்பதாக புள்ளி விவரம் சொல்கிறது.
இதை முக்கியமாக ருபாய் தாளிலும், நாம் பயன்படுத்தும் தாளிலும் இருக்கிறதாம். பேப்பர் தீ பற்றி எரியும் பொது, பேப்பர் surface கருநிறமாகவும், சிகப்பு நிறமாகவும் வருவதற்கு இந்த Bisphenol A வேதி பொருள் தான் காரணம். உடல் பருமம், நரம்பு சம்பந்தமான நோய்கள், புற்று நோய் வர வாய்ப்புள்ளதாக அறிவியல் சொல்கிறது.. கனடா Bispehnol A -வை நச்சு பொருளாக அறிவித்து விட்டது. ஐரோப்பா நாடுகள் மற்றும் கனடாவில் இந்த வேதி பொருளை குழந்தைகள் பயன்படுத்தும் பாட்டில்களின் மூல பொருளாக பயன் படுத்துவதை கண்டித்துள்ளது..

சமீபத்திய ஆராய்ச்சி முடிவில், உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும் இந்த வேதிப்பொருள், ருபாய் தாளில் அச்சடிக்கும் பொது பயன்படுத்தவதாக கண்டறிந்துள்ளது. சுமார் இருபது நாடுகளின் ருபாய் நோட்டுகளில் எவ்வளவு உள்ளது என்று கணக்கிட்டுள்ளார்கள்.
அந்த ஆராய்ச்சி கட்டுரை இத்துடன் இணைத்துள்ளேன்..

மேலே உள்ள படத்தில் அந்தந்த நாட்டு ரூபாய்களில் உள்ள வேதி பொருளின் அளவுகள் குறிப்பிட்டுள்ளது. துர்க்கியில் சிறுது கூட இல்லை, அதிக அளவில் Brazil, Czech Republic பதிவாகி உள்ளது..
என் பால்ய பருவத்தில் இருந்தே ஒரு பழக்கம் உள்ளது. புது புத்தகம் வாங்கினாலும், மடிப்பு இல்லா ருபாய் தாள் கையில் கிடைத்தாலும் அதன் வாசனையில் சிறிது நேரம் லயித்திருப்பேன்.. இனி….
"ரூபாவை முகரலாம்; ரூவாவை முகராதீர்"..

எழுதி பல நாட்கள் ஆனதால், சிந்தனை ஓடவில்லை.. தரம் குறைவதாக உணர்கிறேன்..

Paper currencies.pdf

மைசூர்

கடந்த நான்கு மாதங்களாக இங்கு தான் வாசம்.
ஊர் நன்றாக இருக்கிறது. மொழி தான் ஒண்ணும் புரிபடல.
கதிரவன் தமிழகத்தை மட்டும் தான் சுட்டரிக்கிறான்.
இங்கு வெறும் வெளிச்சம் மட்டும் தான்..
பின்னிரவு பொழுதுகளில் குளிரோ குளிர்!!

புனே-வில் இருந்த பொழுது, மூன்று மாதங்களில் இந்தி சரளமாக வந்தது, மாரதி புரிய ஆரம்பித்தது. இங்கு நான்கு மாதங்கள் ஆகி விட்டது. எனக்கு தெரிந்த கன்னட வார்த்தைகளை, town பஸ் டிக்கெட் பின்னால் எழுதி விடலாம். அவ்வளவுதான். "சொல்ப சொல்ப (கொஞ்சம் கொஞ்சம்), ஒந்து, இரடு (ஒன்னு, ரெண்டு), கொடிரீ (கொடுங்க), கோதில்ல (தெரியாது), பன்றி (வாங்க)", இவ்வளவு தான் என் கன்னட அறிவு. இதை வைத்து தான் ஓட்டிகிட்டு இருக்கேன். பெரும் பகுதி மக்களுக்கு தமிழ் தெரிகிறது, பெங்களூரை போல் இல்லாமல், இங்கு மக்கள் தமிழ் பேசுகிறார்கள்.

சென்ற வாரம், சாமுண்டீஸ்வரி மலையில், மக்கா சோளம் விக்கும் பெண்ணிடம் சிரமப்பட்டு எனக்கு தெரிந்த கன்னட வாரத்தைகளை போட்டு பேசிக்கொண்டிருந்தேன். அது கடைசியில், எனக்கு இந்தி கோதில்ல (இந்தி தெரியாது) என்று என்னை அவமானபடுத்தி விட்டது. நான் கஷ்டப்பட்டு கன்னடத்தில் பேசுகிறேன், நான் பேசுவது இந்தி என்று, எனக்கு பல்பு கொடுத்து விட்டது. (நல்ல வேல யாரும் இல்ல.)
காடுகளை அப்படி பாதுகாக்கிறார்கள். நாம் தான் எல்லாத்தையும் இழந்து விட்டோம் என்று நினைக்கிறேன்.

ஒவ்வொரு வீட்டிலும், ஒரு சிறிய தோட்டம் உள்ளது. இங்கு வந்து எனக்கும் செடி வளர்க்க ஆசை வந்து விட்டது.

குப்பை

இப்போதெல்லாம்

நடு இரவுகளில்

விழிப்பதில்லை;

தூங்கினால்தானே!!

(ஐ ஹைக்கூ. சரி வேற ட்ரை பண்ணுவோம்)

இணையம் என் நேரத்தை
ஆக்கிரமித்துக்கொண்டது
நூலகத்தில் எடுத்த புத்தகம்
பரணில் தூங்குகிறது.
(சரி இப்ப என்ன தான் சொல்ல வர.)


கடற்கரை சென்றேன்
காதலர்கள் ஆக்கிரமித்துக்கொண்டு இருந்தார்கள்.
காலாற சிறிது நடந்தேன்
ஆலிங்கனம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
பள்ளியில் கலவிப்பாடம் நடத்தவேண்டும் என்கிறார்கள்
தினம் அரைமணி நேரம் அவர்களும் கடற்கரையில் நடக்கட்டுமே, செயல்முறையோடு பாடத்தை படிக்க..

Vellingiri trekking Experience

"தென்கைலாயம்" எனப்படும் வெள்ளிங்கிரி மலைக்கு சென்ற சனிக்கிழமை (12-3-2011) நண்பனுடன் சென்று வந்தேன். என் அப்பா பயங்கர பில்ட் up கொடுத்து அனுப்பினார். மிக பயங்கர மலை தான்.திருப்பூரில் இருந்து மதிய சாப்பாட்டுக்கு பிறகு கிளம்பினோம். கோவைக்கு இரண்டு மணிக்கு சென்று அங்கிருந்து, பூண்டி செல்லும் பேருந்தில் "Esha யோகா" மையம் சென்றோம்.

ஒன்னரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது வெள்ளிங்கிரி மலை, அடிவாரம் வரை நடந்து சென்றோம். மலை அடிவாரத்தில் "வெள்ளிங்கிரி நாதர்" ஆலயம் உள்ளது.

மாலை சுமார் 8:45 மலை ஏற துவங்கினோம். முதலில் வெள்ளிங்கிரி பத்தி சொல்ல வேண்டும். வெள்ளிங்கிரி மலை என்பது ஏழுமலை சேர்ந்தது. 6500 அடி உயரம். அதாவது சுமார் இரண்டு கிலோமீட்டர் மேல்நோக்கி ஏறுவது. மத்த மலைக்கும் இதற்கும் உள்ள வித்யாசம், இதில் ஒழுங்கான படி எல்லாம் கிடையாது. முதல் மூணு மலைகளுக்கு சுமாரான படிகள் இருக்கும். பிறகு ஒற்றை அடி பாதை தான். இந்த மலை தூய வன பகுதியில் உள்ளது. வனம் நிஜ வனமாக உள்ளது. யானையின் துதிக்கையை பிடித்து துவம்சம் செய்து, சிங்கத்தை பிடரியை சீவிவிட்டு, புலியின் பற்களை புடுங்கி.. என்று நினைத்து கொண்டு இருந்த எனக்கு, ஒரு யானையின் பிழிரலை கேட்டு சப்தநாடியும் ஒடுங்கி விட்டது. (இதுவரை ஜூவில் கூட யானை சத்தம் போட்டு கேட்டது இல்லை). மலை ஏறி கீழே இறங்கும் வரை ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது.

இதுவரை செய்யாத உடல் பயிற்சிகள் மலை ஏறும் போதுதான் நினைவுக்கு வந்தது. நான் போட்டிருந்த துணிகளே பாரமாகி வெறும் டிரௌசரோடு மேலே போய் சேர்ந்தேன். நமக்கு தேவையானதை நாம் தான் கொண்டு செல்ல வேண்டும், தண்ணீர் உட்பட. மேலே ஒன்றும் கிடைக்காது.
முதல் மலை முடிவிலும், இரண்டாவது மலை முடிவிலும் ஒரு சுனை உள்ளது. முதல் மூன்று மலை ஏறும் போது கடும் வியர்வை வெளியேறும். Dehydration- ஐ தடுக்க தண்ணீர் குடிக்க வேண்டும். முதல் இரண்டு சுனைகளில் தண்ணீர் பிடித்துக்கொண்டால் உண்டு, இல்லையேல் ஆறாவது மலை முடிவில் தான் அடுத்த சுனை.

நான்காவது மலையிலிருந்து பாதை மிக சுமாராக தான் இருக்கும். நான்காவது, ஐந்தாவது மலை காற்று வீசும். வெளியேறும் வியர்வை, எதிர்படும் காற்றில் காய்ந்து விடும். நான்காவது மலையை திருநீர் மலை என்பர். அங்கு உள்ள மண் எல்லாம் திருநீறு போல இருக்குமாம்.

ஆறாவது மலை வந்து சேரும் போது சரியாக மணி இரவு ஒன்று. குளிர் ஆரம்பித்து விட்டது. அத்துடன் மழையும் சேர்ந்துகொண்டது. ஆறாவது மலையில் ஒரு சுனை உள்ளது. ஒரு குளியலை போட்டு கிளம்பினோம். சுனை நீர் படு குளிராக இருந்தது. ஆயிரம் ஊசிகள் ஒரே நேரத்தில் என் முதுகில் குத்தியது போல் உணர்ந்தேன்.

ஆறாவது மலை முடிவில் ஒரு தேனீர் கடை உள்ளது. எல்லாம் இரு மடங்கு கட்டணம். ஒன்னரை மணி அளவில் அந்த கடைக்கு போய் சேர்ந்தோம். மழையும் கடுமையாக இருந்தது. ஒரு மணி நேரம் கடுமையான மலை. ஏழாவது மலை மிக கடுமையாக இருக்கும் என்றும், மழை பெய்த ஈரம் இருந்தால் வழுக்கும் என்று கூறினார்கள். பாதி ஏறியவர்கள் கூட பாறை வழுக்குகிறது என்று திரும்பி வந்தார்கள். இரண்டரை மணி நேரம் ஒரு கூடாரத்தில் இருந்தோம்.

நாங்கள் மீண்டும் காலை நாலு மணி அளவில் ஏழாவது மலையை ஏற ஆரம்பித்தோம். ஏழாவது மலை மிக மிக கடினம். கிட்ட தட்ட கைலாசத்தை போல உள்ளது. பாதையும் செங்குத்தாக உள்ளது. மிக பெரிய பிரச்சனை, குளிர் தான். நான் மலைத்து போய் விட்டேன். இந்த மார்ச் மாதத்தில் இப்படி ஒரு குளிரா. ஒரு முறை இங்கு தான் ஒருவர் குளிரில் உறைந்து விட்டாராம். அப்பா சொன்னார். பனிப்புயல் கூட அடிக்கடி வருமாம்.

உச்சி மலையை 5:30 கு சேர்ந்தோம். காலை சூரிய உதயத்தை பார்த்து விட்டு 6:45 கு கிளம்பினோம். வெயில் ஏறுவதற்கு முன் இறங்க வேண்டும். இறங்குவது ஏறுவதை விட சிரமமாக இருந்தது. மிக மிக ஜாக்கிரதையாக இறங்க வேண்டும். பாதை பெரும்பாலும் பள்ளத்தாக்கை ஒட்டியே செல்லும். விழுந்தால் நேராக சிறுவாணி அணை தான். கீழே இறங்கும் போது மணி மதியம் ஒன்று.

கீழே இறங்கி இரண்டு நாள்கள் ஆகியும் கால்வலி போகவில்லை.

நானோ தொழில்நுட்பத்துக்கு காப்புரிமை கோரும் நாடு

இப்போது எங்கு பார்த்தாலும் நானோ (10exp-12 m) மயமாக தான் இருக்கிறது. ஒரு பத்து வருடங்களுக்கு முன் உயிர் தொழில்நுட்பம் இருந்த இடத்தை எப்போது நானோ இருக்கிறது. பெரும்பாலான மக்களுக்கு நானோ என்றால் என்ன வென்று தெரியும். நானோவும் சரி உயிர் தொழில்நுட்பமும் சரி, ஆராய்ச்சி நிலையிலே இருக்கிறது. அரசாங்கம் ஆண்டு தோறும் இதில் ஆராய்ச்சி செய்ய நிதி ஒதுக்குகிறது.

எங்கள் அண்ணா பல்கலையில் உள்ள உயிர் தொழில்நுட்பம் வளாகம் (Center for BioTechnology), நானோ தொழில்நுட்ப வளாகம் இரண்டுமே மத்திய அரசாங்க நிதியால் உண்டானது தான். (funded by FIST Department of Science and Technolgoy-DST). கல்வி வல்லுனர்கள் ஒவ்வொரு வருடமும், இந்த இரு துறைகளுக்குமே நல்ல வேலை உள்ள துறை என்று கூறுகிறார்கள். அனால் எனக்கு தெரிந்து வேலைக்கு சென்றது மிக சொற்பமான பேர் தான். நான் இளங்கலை படித்த போது உயிர் தொழில்நுட்பம் (B.Tech Biotechnology) சுமார் 52 பேர் படித்தார்கள். அவர்களில் அந்த துறைகளில் (ஆசிரியர் வேலை தவிர்த்து) வேலை பார்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஒரு கைகளே போதும். பெரும் பகுதி மக்கள் மேல் படிப்பிற்கு தான் சென்றுள்ளனர். அவர் அவர் சக்திக்கு ஏற்ப இந்தியாவிலோ, அமெரிக்காவிலோ படிக்கின்றனர்.

இது வரை உயிர் தொழில்நுட்ப product ஆக வந்தது BT Cotton Bacillus thuringiensis cotton என்ற பருத்தி தான். இதுவும் இப்போது பல போராட்டங்களில் உள்ளது. அடுத்து BT Brinjal வரபோகுது, அதற்கு இப்போதே எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

அடுத்து நானோ தொழில்நுட்பம், நான் இளங்கலை படித்த போது, நானோ வில் ப்ராஜெக்ட் பண்ணலாம் என்று ஆரம்பித்தேன். நானும் முக்கி முக்கி பார்த்தேன் நான் செய்த மருந்து உருண்டை நானோ அளவில் வரவில்லை. எங்கள் கல்லூரியிலும் பெரிய அளவு வசதிகள் இல்லை. அதனால், நானோவில் செய்யலாம் என்று ஆரம்பித்தை, அதன் தம்பி மைக்ரோ வில் (10 exp -6 m) செய்து முடித்து விட்டேன்.

சரி இப்போது விசயத்திற்கு வருவோம். கிரேக்க நாட்டினர் நானோ தொழில்நுட்பத்துக்கு காப்புரிமை கேட்க போகிறார்கள். கிரேக்க மொழியில் இருந்து தான் NanoTechnology (nanos and technologia) வந்ததாம். இதன் மூலம் ஆண்டுக்கு பல பில்லியன் டாலர் வருவாய் வர வாய்ப்பிருப்பதாக வல்லுனர்கள் கிரேக்க அரசுக்கு கூறியுள்ளனர்.
நாடாளு மன்றத்தில் நாடாளுமன்ற தலைவர் கூறிய உரை தான் கீழே உள்ளது.

“Quite honestly, we are sick and tired at the world’s incessant exploitation of our country’s cultural heritage and the fact that people make billions on the back of our amazing cultural achievements and the inventive talents of our great ancestors” said a spokesperson for the Hellenic parliament.

Royalty royalty என்று சொல்லுவார்கள், அது இது தான் போல.

Reynolds number

reynoldsNumberFormula.png

மேலே உள்ள சமன்பாடு தான் Reynold’s number என்பர். ஒரு திரவத்தின் அடர்த்தி, திசை வேகம், அந்த குழாயின் விட்டம் இதை பெருக்கி அதனுடன் திரவத்தின் பாகுநிலையை வகுத்தல் நமக்கு Reynold’s number கிடைக்கும்.  இதை வைத்து ஒரு திரவத்தின் தன்மையை கூறலாம்.
நாம் வீடுகளில் கவனித்திருப்போம், குழாயை திருகினால் தண்ணி சிதறிக்கொண்டு வெளிவரும். நாம் வைத்திருக்கும் குடத்தின் வாயை விட்டு வெளியே சிதறும். இதை Turbulent flow என்பார்கள். காவிரி ஓடி வருவதும் turbulent flow தான், பம்பு செட்டில் தண்ணி வருவதும் turbulent flow தான். Reynold’s number value- வை வைத்து மூன்று வகையாக பிரிக்கலாம். 2100 வரை இருந்தால் அது Laminar flow ஆகவும்,  4000 இக்கு மேல் இருந்தால் அது Turbulent flow ஆக இருக்கும். இடைப்பட்ட  2100- 4000 வரை உள்ளதை Transient flow என்பார்கள்.

சும்மா வரையனுமே தான் வரைஞ்சிருக்கேன். இதுக்கும் Reynold's numberkkum ஒரு சம்பந்தமும் இல்ல.

நாம் என்னை வரும் போது கவனித்திருப்போம். ஒரு துளி வெளியே சிதறாமல் பாட்டில்லே வந்து விழும். அதன் viscosity அதிகம் இருப்பதாலும், அது Laminar flow வில் வருவதால், ஆர்பாட்டம் இல்லாமல் வரும்.
ஒரு சிகரெட் எரியும் போது பார்த்திருக்கலாம், அதன் கங்குக்கு அருகில் இருந்து புகை சீரே கொஞ்ச தூரம் மேலே வரும் (Laminar Region), பிறகு அதன் போக்கு சிறிது விலகும் (Transient region), பிறகு அப்படியே கன்னாபின்ன வென்று போய் மறைந்து போகும் (Turbulent region).

Consider thats the smoke arising from the cigarette.

சரி இத வச்சுக்கு கிட்டு என்ன பண்ண என்ற கேள்வி வரலாம். நம் வீட்டு பம்பின் efficiency இதை வைத்து கண்டு பிடிக்கலாம். Bernouli’s principle – formula உள்ளது. (அதாவது, நாம் குடுக்கும் பவர்-க்கு எவ்வளவு சக்தியை நம் தண்ணீர்க்கு தருகிறது என்பது தான் efficiency ஆகும். இதை percentage -இல் குறிப்பிடுவர், பொதுவாக 60%-80% இருக்கும். சிலசமயம் 40% கூட பழைய டப்பா பம்ப்-க்கு இருக்கும்).